(இரண்டாம் கட்டுரை)
ஓமெய் மலை
மற்றும்
லெசான் மலை
ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி.4ம் நூற்றாண்டிலேயே இந்திய துறவி பெள சாங், இம்மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின், இம்மலையை சூரியன் உதயமாகும் இடத்தில் முதலாவது மலை என்று வியந்து பாராட்டினார். பண்டைக்கால இந்தியா, சீனாவை சூரியன் உதயமாகும் இடமென புகழ்ந்து போற்றியது. அதன் பின்னர், ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்ற புகழை பெற்றது.
ஓ மெய் மலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கம்பீரமான தோற்றம், அதன் நீண்டகால வரலாறுடைய புத்த மத பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கி.பி.ஓன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் புத்த மதம், ஓ மெய் மலையில் பரவியது. அத்துடன் இங்கு சீனாவின் முதலாவது புத்த மதக்கோயில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறங்களில் இதர கோயில்கள் அமைக்கப்பட்ட பின், ஓ மெய் மலை, சீன புத்த மதத்தின் புனித இடங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இங்கு ஊதுவத்தியின் மணம் பரவியுள்ளது.
இம்மலையில் SAMANTABHADRA புத்தரை மக்கள் வழிபாடு செய்கின்றனர். அவர், உலகில் பல புத்தர்களின் மூத்த மகனாவார். புத்த மதம் இருக்கும் இடமெங்கும் அவர் காணப்படுகிறார். தற்போது ஓ மெய் மலையில் மொத்தம் 300க்கும் அதிகமான துறவிகளும் பிக்குகளும் இருக்கின்றனர். சுமார் 30 கோயில்கள் இங்கு காணப்படுகின்றன.

இந்த SAMANTABHADRA புத்தர் கையில் தங்க ரூ யீ உடன், குறிப்பு, ரூ யீ என்பது, மங்கலத்தைக்காட்டும் ஒரு வகை ஜெட்கபொருளாகும். தலையில் பொன் மணி முடியை அணிந்துள்ளார். இந்தக் கம்பீரமான தோற்றத்தின் கீழ், அவர் சுவாரி செய்யும் 6 தந்தம் கொண்ட வெள்ளை யானை காணப்படுகிறது. புத்தர் சிலை, மண் உலகில் உள்ள இன்பம் கோபம், துயரம், மகிழ்ச்சி ஆகிய 4 வகை உணர்வுகளை காட்டுகிறது. மக்கள், எந்தத் திசையில் இருந்தாலும் அவருடை நேர் முகத்தை பார்க்க முடியும். இந்தப் புத்தரோ மக்களை நோக்கி பார்த்த வண்ணம் அனைவருக்கும் இன்பம் தருவார். அனைவருக்கும் புகலிடம் தருவார் என்றார்.
புத்த மதம் ஓ மெய் மலையில் பரவி வரும் போக்கில், இம்மலையின் பண்பாடும் வளம் பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள பல கோயில்களும் புத்த சிலைகளும் ஓ மெய் மலையின் எழில் மிக்க இயற்கைக் காட்சியுடன் இணைந்திருக்கும் தலைசிறந்த பண்பாடாக உருவாயின. இதைக் கருத்தில் கொண்டு தான், யுனெஸ்கோ, ஓ மெய் மலையை உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாக சேர்த்துள்ளது.ஓ மெய் மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின் இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லெ சான் பெரும் புத்தர் சிலையைக் கண்டுகளிக்கலாம். இந்தச் சிலை, உலகில் மிக பெரிய புத்த சிலையாகும். இதிலிருந்து புத்த மதத்தின் மீதான அப்போதைய மத நம்பிக்கையாளர்களின் புக்தியை கண்டறிந்து வியப்படைவீர்கள். வழிக்காட்டி வூ லீ பிங் அம்மையார் கூறியதாவது:




1. ஓ மெய் மலை, சீனாவின் புனித புத்த மத இடங்களில் ஒன்றாக விளங்குகிறதா?
2. லெசான் பெரிய புத்தர் சிலை, உலகில் மிக பெரிய புத்தர் சிலை. அதன் உயரம் எவ்வளவு?
இக்கட்டுரையைக் கேட்ட பின், அவற்றுக்கான விடைகளை நீங்கள் இதுவரை சீனாவின் ராட்சத பாண்டாவின் ஊரான சிசுவான் மாநிலத்தில் இன்பப் பயணம் பற்றிய பொது அறிவிப்போட்டிக்கான இரண்டாவது கட்டுரையைக் கேட்டீர்கள். நாளை, அதன் மூன்றாவது கட்டுரையைக் கேட்கலாம்.
No comments:
Post a Comment