Thursday, February 08, 2007

வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம்-(4)

<0>பொது அறிவுப்போட்டி<0>
நான்காவ‌து க‌ட்டுரை
சுச்சுவான் மாநிலத்தில் வாழும் விலங்குகளின் பிரதிநிதியான பாண்டா பற்றி கூறுகின்றோம். செங்து நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், அதாவது பாண்டாவின் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், பாண்டாக்கள் மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றான, மிக அதிக நிலப்பரப்பில் வளரும் ஜியன்சு எனும் ஒரு வகை மூங்கில் இனம் அழிந்துவிட்டது, பாண்டாக்களின் எதிர்கால வாழ்வுக்காக, இந்த மூங்கில்களை மீண்டும் வளர்ப்பதற்காக பணம் திரட்டும் வகையில், சீன இசையமைப்பாளர்கள் முன்பு நீங்கள் கேட்ட இந்த பாடலை இயற்றினர். இப்பொழுது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் இந்த வகை மூங்கில் செழிப்புடன் வளர்கின்றது. இயற்கையில் மிகவும் பழமை வாய்ந்த மிக அரிதான விலங்கான பாண்டாக்கள் மிகவும் இன்பமாகவும் எந்த கவலையின்றியும் வாழ்கின்றன.


சுச்சுவான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், பாண்டாக்கள் முக்கியமாக வாழும் இடங்களில் ஒன்றாகும். எனவே, சுச்சுவான் மாநிலம், பாண்டாக்களின் ஊர் என கருதப்படுகின்றது. சுச்சுவான், ஷென்சி மாநிலங்களிலும் கான்சு மாநிலத்தின் ஒரு பகுதியிலும் உள்ள மலைப் பிரதேசங்களில் தான் காட்டு பாண்டாக்களை மக்கள் காண முடியும். எனவே, சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள், பாண்டாக்களை நேராக பார்க்க வேண்டுமானால், அவர்கள் இயற்கை பாதுகாப்பு மண்டலத்திலுள்ள சீனப் பாண்டாத் தோட்டத்துக்கு வர வேண்டும். இந்த மண்டலத்தின் பொறுப்பாளர் சாங் லி மிங் கூறியதாவது-

பாண்டாக்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவி செய்து, உலகில் பாண்டாவை விரும்புவோருக்கு, பாண்டாவை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதும், உயிரின வாழ்க்கை சூழலை பாதுகாப்பது ஏன் என்பதை பயணிகளுக்கு தெரிவிப்பதும் எங்கள் நோக்கமாகும் என்றார்.
நீண்டகாலமாக, பாண்டாவின் உருண்டையான உடல், மென்மையும் வேடிக்கையுமான செயல்பாடு, வெள்ளையும் கருப்பும் கலந்த தோற்றம் ஆகியவை மக்களை மிகுதியும் கவர்ந்து வருகின்றன. சீனத் தேசிய பாண்டா தோட்டத்தில் 100க்கும் அதிகமான பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல பாண்டாக்கள் வெளியே விளையாடுகின்றன, அவற்றில் சில, சலுக்கல் ஏணியில் விளையாடுகின்றன. சில, சூரிய ஒளியில் பாறையின்மீது சார்ந்திருக்கின்றன. வேறு சில, மரங்களில் ஏறி, கஷ்டமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன

அமெரிக்காவிலிருந்து வந்த Rebecca Haase அம்மையார், பாண்டாக்கள் சாப்பிடுவது, நீர் குடிப்பது, மற்றும் விளையாடுவதை பார்த்ததும் படம் பிடித்தார். அவர் பாண்டாவை முதல் முறை நேரடியாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவர் கூறியதாவது :-


நான் இங்கு வந்து பாண்டாக்களை நேராக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவை பார்த்தால் மிகவும் ஆரோக்கியமாகவும் பிரியமுள்ளதாகவும் இருக்கின்றன. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் மேலும் கூடுதலான பாண்டாக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
சீனப் பாண்டாத் தோட்டத்தில் முன்னேறிய சாதனங்களுடன் கூடிய ஒரு குட்டி வளர்ப்பு அறை உண்டு, இதில் குட்டி பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. சீன தைவானிலிருந்து வந்த திரு சாங் சி சாங் அவர்கள் இந்த அறையை அதிக நேரம் பார்த்தார். பணியாளர்கள் குட்டி பாண்டாக்களுக்கு பாலை ஊட்டிய முழு போக்கையும் அவர் பார்வையிட்டார். அவர் கூறியதாவது:-


சீனத் தேசிய பொக்கிஷமான பாண்டாக்கள் பற்றி இந்த முறை அதிகம் அறிந்துகொண்டேன், பாண்டா
பற்றிய கதை, வளரும் சூழ்நிலை ஆகியவற்றை வழிகாட்டி ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். பண்டாக்கள் இனப்பெருக்குவது மிகவும் கஷ்டம், தாய் பாண்டாவுக்கு தன் குட்டியை வளர்க்கவும்
தெரியாது என்றார் அவர்.

பாண்டாக்கள் மிகவும் பிரியமுள்ளவை. மேன்மேலும் கூடுதலான பயணிகள் சில நேரங்களை செலவழித்து வொலுங்கிற்கு வந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்புகிறார்கள். வளர்ப்பாளரின் ஆடையை அணிந்த ஜப்பானியர் Kodama Midori அவர்களில் ஒருவராவார். தம்முடன் சேர்ந்து மொத்தம் மூன்று பேர் வந்துள்ளதாகவும், பாண்டாக்களுடன் ஒரு வாரம் கழிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நான் நாள்தோறும் காலையில் பாண்டாவுக்கு உணவு ஊட்டுகின்றேன், மதியமும் இரவிலும் அறையை சுத்தம் செய்து, கழிவுகளை அகற்றுகின்றேன். சாதாரண நாட்களில் பாண்டாகள் கிட்ட இருப்பது சாத்தியமாகாது. எனவே, இந்த முறை நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் அவர்.

உண்மையில் வொலுங்கில் வேறுபட்ட பருவங்களில், பாண்டாக்களின் வேறுபட்ட வளர்ப்பு கட்டத்தை கண்டறியலாம். கோடைக்காலத்தில் வொலுங்கில் குளிர்ச்சியாக இருக்கிறது. இக்காலகட்டம் பாண்டாக்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் காலமாகும். இலையுதிர் காலத்தில், பாண்டாக்கள் குட்டிகளை பிரசவிக்கும் முழு போக்கையும் பயணிகள் பார்க்கலாம். வசந்த காலத்தில் பாண்டா இனபெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இதில் பல காதல் காட்சிகள் உண்டு.

வளர்ப்பு பாண்டாக்கள் தவிர, தற்போது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் காடுகளில், 100க்கும் அதிமான காட்டு பாண்டாக்கள் வளர்கின்றன. உலகில் உள்ள பாண்டாக்களின் மொத்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பகுதியாகும். உயர் நிலை பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், அண்மையில் இந்த இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் பாண்டாக்களின் வாழ்க்கை பற்றிய உலகின் முதலாவது ஆராய்ச்சி நடவடிக்கை துவங்கியுள்ளது. அவர்கள் அறிவியல் திறனுடைய கண்காணிப்பு கருவிகள் மூலம் காட்டிலுள்ள பாண்டாக்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கலாம்.
அடுத்து, இரண்டு வினாக்கள்-



1.) பாண்டாவின் ஊர், சுச்சுவான் மாநிலத்தில் உள்ளதா?
2.) வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் எத்தனை காட்டு பாண்டாக்கள் உள்ளன?

சிங்செங் மலையும் துச்சியாங் அணைக்கட்டும்(3)

<0> மூன்றாவது க‌ட்டுரை<0>


சீன வானொலி நிலையமும் சீன ஸ்சுவான் மாநிலத்து சுற்றுலாப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் பாண்டாக்களின் பிறந்தகம்-சீன ஸ்சுவான் மாநிலம் என்பது பற்றிய சுற்றுலா அறிவுப் போட்டிக்கான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தவறாமல் கேட்டுவருவதை வரவேற்கின்றோம். இன்று நாங்கள் ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங்து நகருக்கு அருகிலுள்ள உலக பண்பாட்டு மரபுச்செல்வமான சிங்செங் மலைக்கும் துச்சியாங் அணைக்கட்டுக்கும் சென்று பார்க்கலாம். ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங்துவின் வட மேற்கு பகுதியிலிருந்து புறப்பட்டுக் காரில் சுமார் ஒரு மணி நேரம் பயணித்தால், சிங்செங் மலையைச் சென்றடையலாம்.
சிங்செங் மலை, சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றாகும்.


மனிதரும் இயற்கையும் இணக்கமாக இருப்பது என்பது தாவ் மதத்தின் கருத்து. சுமார் 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், தாவ் மதத்தைத் துவக்கிவைத்த சாங்லின் என்பவர், இந்தப் பசுமையான சிங்செங் மலையின் அழகையும் அமைதியையும் விரும்பியதால், இவ்விடத்தில் தாவ் மதச் சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று மக்கள் ஊகித்துபார்க்கின்றனர்.
தாவ் மதம் துவக்கிவைக்கப்பட்ட பின்னர், அது நீண்ட காலம் சீனாவிலும் கிழக்காசியாவிலும் பெரும் செல்வாக்கு வாய்ந்த மதமாக இருந்துவந்தது. தற்போது சிங்செங் மலையில் உள்ள சுமார் நூறு தாவ் மதத்தவர்கள், மத விதிகளின் படி கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை நடத்திவருகின்றனர். ஆனால், தாவ் மதத்தின் துவக்கக் காலத்திலே நிலைமை அப்படி இருக்கவில்லை என்று வழிகாட்டி காங்யு கூறினார். அவர் கூறியதாவது, அப்போது, தாவ் மதத்தவர்கள் தத்தமது வீடுகளில் தாவ் மதச் சித்தாந்தத்தைக் கற்றுக்கொண்டு தங்களது செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதனை கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்து குழந்தை பெறவும், மது குடிக்கவும் இறைச்சி வகைகளை உண்ணவும் அனுமதிக்கப்பட்டனர். தர்மம் செய்வதில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால் தற்போதைய நிலைமை அதிலிருந்து வேறுபடுகின்றது.
சிங்செங் மலையில் தங்கியிருக்கும் தாவ் மதத்தவர்கள் தத்தமது குடும்பத்தினர்களை விட்டுவிலகிய பின்னர், தாவ் மத ஆசிரியர்களிடமிருந்து தாவ் மதச் சிந்தனையைக் கற்றுக்கொண்டு, தாவ் மத நெறிக்கிணங்க தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மது குடிக்கவோ, இறைச்சி வகைகளை உண்ணவோ, திருமணம் செய்து குழந்தை பெறவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர். இதுவரை சிங்செங் மலையில் பத்துக்கு மேலான தாவ் மதக் கோயில்களும் ஏராளமான தொல்பொருட்களின் சிதிலங்களும் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. எளிமை, இயற்கை ஆகியவற்றுக்குத் தாவ் மதத்தவர்கள் மதிப்பு அளிப்பதால், இம்மலையிலுள்ள தாவ் மதக் கோயில்களிலும் கூடாரங்களிலும் பெரும்பாலானவை, அடர்ந்த மரங்களுக்கிடையில் அமைந்து, சுற்றுப்புறத்தில் உள்ள மலைகள், மரங்கள், கற்பாறைகள் மற்றும் நீருற்றுகளுடன் இணைந்து எழில் மிக்க இயற்கைக் காட்சியாக உள்ளன. இந்தக் கோயில்களில் சிங்செங் மலையின் உச்சிக்கு அருகில் அமைந்துள்ள சாங்சிங்குங் கோயிலில் வழிபாடு செய்ய, தாவ் மத நம்பிக்கையுடையவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இக்கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள தாவ் மதத்தைத் துவக்கிவைத்தவரான லாவுசியின் உருவச் சிலை குறிப்பிடத் தக்கது. சிங்செங் மலையின் அமைதியையும் தாவ் மதப் பண்பாட்டின் வளத்தையும் உணர்ந்துகொண்ட பின்னர், இந்தச் சுற்றுலா நெறியில் அமைந்துள்ள பார்வையிடுவதற்குரிய மற்றொரு காட்சித் தலத்தை உங்களோடு சேர்ந்து கண்டுகளிக்கிறோம். சிங்செங் மலைக்கு அருகில் அமைந்துள்ள துச்சியாங் அணைக்கட்டு இது. உலகில் இதுவரை மிக நீண்ட வரலாறுடைய நீர் சேமிப்புத் திட்டப்பணியும் இதுவாகும்.
மின்சியாங் ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள துச்சியாங் அணைக்கட்டு, சுமார் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள அதிகாரி லீபின் என்பவரின் தலைமையில் கட்டியமைக்கப்பட்டது. உலகில் தொன்மை வாய்ந்த புகழ்பெற்ற நீர் சேமிப்புத் திட்டப்பணிகளில், பண்டைக் கால Babylon மன்னராட்சி மற்றும் பண்டைகால ரோம் நாட்டில் செயற்கை முறையில் தோண்டியெடுக்கப்பட்ட கால்வாய்கள், வெகு காலத்திற்கு முன்பே பாழாகிவிட்டன. சீனாவின் துச்சியாங் அணைக்கட்டு மட்டுமே இதுவரையிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்த அணைக்கட்டுக் கட்டப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும் வெள்ளம் ஏற்பட்ட போதெல்லாம், ஆற்று நீர் பாய்ந்து ஓடியதால் வெள்ளப்பெருக்கு அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால், துச்சியாங் அணைக்கட்டின் வடிவமைப்பின் படி, மின்சியாங் ஆறு 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், வெள்ள நீரை வெளியேற்றுவதோடு, வயலுக்கு நீர்ப்பாசனம் செய்யவும் முடியும். அதாவது மின்சியாங் ஆறு, உட்புற ஆறாகவும் வெளிப்புற ஆறாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்கு உட்புற ஆறும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு வெளிப்புற ஆறும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பயணி Ken Boyd, துச்சியாங் ஆற்றின் நுட்பமான வடிவமைப்பினாலும் பண்டைக் காலச் சீன மக்களின் விவேகத்தினாலும் வியப்படைந்தார். அவர் கூறியதாவது, துச்சியாங் அணைக்கட்டு சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதை அறிந்து வியப்படைகின்றேன். நீரோட்டத்தை இந்த அணைக்கட்டு கட்டுப்படுத்தியதால், வறட்சிக்காலத்தில் நீர்ப்பாசனம் செய்வதற்குப் போதிய அளவு நீர் உள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் பயன் பெறலாம். மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படலாம் என்றார் அவர். துச்சியாங் அணைக்கட்டு இருப்பதன் காரணமாக, இன்றைய சீனாவின் ஸ்சுவான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான எழில் மிக்க இயற்கைக் காட்சிகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சித் தலங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்து இக்கட்டுரையுடன் தொடர்புடைய 2 வினாக்களை வழங்குகிறோம். .
1) சிங்சங் மலை, சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றா?
2) துச்சியாங் அணைக்கட்டு, உலகில் இதுவரை மிக நீண்ட வரலாறுடைய நீர் சேமிப்புத் திட்டப்பணியாகும். அது கட்டியமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன?

ஓமெய் மலை மற்றும் லெசான் மலை(2)

<0>பொது அறிவுப்போட்டி<0>
(இரண்டாம் க‌ட்டுரை)

ஓமெய் மலை


மற்றும்

லெசான் மலை

ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி.4ம் நூற்றாண்டிலேயே இந்திய துறவி பெள சாங், இம்மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின், இம்மலையை சூரியன் உதயமாகும் இடத்தில் முதலாவது மலை என்று வியந்து பாராட்டினார். பண்டைக்கால இந்தியா, சீனாவை சூரியன் உதயமாகும் இடமென புகழ்ந்து போற்றியது. அதன் பின்னர், ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்ற புகழை பெற்றது.

ஓ மெய் மலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கம்பீரமான தோற்றம், அதன் நீண்டகால வரலாறுடைய புத்த மத பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கி.பி.ஓன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் புத்த மதம், ஓ மெய் மலையில் பரவியது. அத்துடன் இங்கு சீனாவின் முதலாவது புத்த மதக்கோயில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறங்களில் இதர கோயில்கள் அமைக்கப்பட்ட பின், ஓ மெய் மலை, சீன புத்த மதத்தின் புனித இடங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இங்கு ஊதுவத்தியின் மணம் பரவியுள்ளது.

இம்மலையில் SAMANTABHADRA புத்தரை மக்கள் வழிபாடு செய்கின்றனர். அவர், உலகில் பல புத்தர்களின் மூத்த மகனாவார். புத்த மதம் இருக்கும் இடமெங்கும் அவர் காணப்படுகிறார். தற்போது ஓ மெய் மலையில் மொத்தம் 300க்கும் அதிகமான துறவிகளும் பிக்குகளும் இருக்கின்றனர். சுமார் 30 கோயில்கள் இங்கு காணப்படுகின்றன.

மலை உச்சியில் அமைந்துள்ள ஜின் திங் என்னும் இடம், ஓ மெய் மலையின் முக்கிய இடமாகும். இங்கு பளப்பளக்கும் மூன்று தங்க நிற மண்டபங்களுடன் 48 மீட்டர் உயரமுள்ள SAMANTABHADRA தங்க புத்தர் சிலை, மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வழிக்காட்டி யாங் தேள அம்மையார் கூறியதாவது:

இந்த SAMANTABHADRA புத்தர் கையில் தங்க ரூ யீ உடன், குறிப்பு, ரூ யீ என்பது, மங்கலத்தைக்காட்டும் ஒரு வகை ஜெட்கபொருளாகும். தலையில் பொன் மணி முடியை அணிந்துள்ளார். இந்தக் கம்பீரமான தோற்றத்தின் கீழ், அவர் சுவாரி செய்யும் 6 தந்தம் கொண்ட வெள்ளை யானை காணப்படுகிறது. புத்தர் சிலை, மண் உலகில் உள்ள இன்பம் கோபம், துயரம், மகிழ்ச்சி ஆகிய 4 வகை உணர்வுகளை காட்டுகிறது. மக்கள், எந்தத் திசையில் இருந்தாலும் அவருடை நேர் முகத்தை பார்க்க முடியும். இந்தப் புத்தரோ மக்களை நோக்கி பார்த்த வண்ணம் அனைவருக்கும் இன்பம் தருவார். அனைவருக்கும் புகலிடம் தருவார் என்றார்.


புத்த மதம் ஓ மெய் மலையில் பரவி வரும் போக்கில், இம்மலையின் பண்பாடும் வளம் பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள பல கோயில்களும் புத்த சிலைகளும் ஓ மெய் மலையின் எழில் மிக்க இயற்கைக் காட்சியுடன் இணைந்திருக்கும் தலைசிறந்த பண்பாடாக உருவாயின. இதைக் கருத்தில் கொண்டு தான், யுனெஸ்கோ, ஓ மெய் மலையை உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாக சேர்த்துள்ளது.ஓ மெய் மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின் இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லெ சான் பெரும் புத்தர் சிலையைக் கண்டுகளிக்கலாம். இந்தச் சிலை, உலகில் மிக பெரிய புத்த சிலையாகும். இதிலிருந்து புத்த மதத்தின் மீதான அப்போதைய மத நம்பிக்கையாளர்களின் புக்தியை கண்டறிந்து வியப்படைவீர்கள். வழிக்காட்டி வூ லீ பிங் அம்மையார் கூறியதாவது:




இந்த லெ சான் புத்தர் சிலை ஏறக்குறைய கி.பி.7ம் நூற்றாண்டில், அதாவது சீனாவின் தாங் வம்சக்காலத்தில் அமைக்கப்பட்டது. துவக்கத்திலேயே இங்கு புனிதப் பயணம் மேற்கொண்ட ஹேதொங் என்னும் முனிவர், இவ்விடம் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாதலால், இங்கு படகுகள் மூழ்கி உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டதைக் கண்டறிந்தார். பின், லெசான் பெரிய புத்தர் சிலையைக் கட்டியமைப்பதன் மூலம் வெள்ளப்பெருக்கை வென்றடக்குவதென முடிவு செய்தார். ஆதலால், நன்கொடைக்காக, அவர் நாடெங்கும் சென்றார். லெசான் திரும்பிய போது, ஊழல் மிகுந்த அதிகாரி ஒருவரால் கைப்பற்றப்பட்டார். பேராத்திரம் அமைந்த அவர், என் கண்களைப் பிடுங்கலாம், ஆனால், இந்தச் சொத்து உனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று சொல்லி, தமது கண்களைப் பிடுங்கினார். இதைக் கண்ட அந்த அதிகாரி பயந்தோடி விட்டார். இந்தச் சிலையின் தலை கட்டிமுடிக்கப்பட்டதும் துறவி ஹேதொங், தேவலோகத்துக்குச் சென்றார் என்று அவர் கூறினார்.

பின்னர் இரண்டு தலைமுறையினரின் முயற்சிகளுக்குப் பின், அதாவது ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்குப் பின், லெசான் புத்தர் சிலை கட்டிமுடிக்கப்பட்டது. இன்று நாங்கள் தூரத்திலிருந்து இந்த புத்தர் சிலையைப் பார்க்கும் போது, துறவி ஹேதொங்கின் தியாக எழுச்சியையும் மலையைத் தோண்டி புத்தர் சிலையை உருவாக்கும் வீரசாகசத்தையும் வியந்து போற்றுகிறோம். எனவே, பல புத்தமத நம்பிக்கையாளர்கள், இங்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு சீனாவின் சிங்ஹேய் மாநிலத்தின் தொங்நாராச்சிங் கோயிலைச் சேர்ந்த உயிருள்ள புத்தர் NORBU RINPOCHE இவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:
புத்த மத நம்பிக்கையாளர்களாகிய எங்களைப் பொறுத்த வரையில், இங்கு வந்து நீண்டகால வரலாறு வாய்ந்த கம்பீரமான மாபெரும் புத்தர் சிலையை மரியாதையுடன் வணங்க முடிந்தமை, எனக்கு மன அமைதியை தந்தது என்றார் அவர்.இனி, இந்தக் கட்டுரையிலுள்ள இரண்டு வினாக்கள்:
1. ஓ மெய் மலை, சீனாவின் புனித புத்த மத இடங்களில் ஒன்றாக விளங்குகிறதா?
2. லெசான் பெரிய புத்தர் சிலை, உலகில் மிக பெரிய புத்தர் சிலை. அதன் உயரம் எவ்வளவு?
இக்கட்டுரையைக் கேட்ட பின், அவற்றுக்கான விடைகளை நீங்கள் இதுவரை சீனாவின் ராட்சத பாண்டாவின் ஊரான சிசுவான் மாநிலத்தில் இன்பப் பயணம் பற்றிய பொது அறிவிப்போட்டிக்கான இரண்டாவது கட்டுரையைக் கேட்டீர்கள். நாளை, அதன் மூன்றாவது கட்டுரையைக் கேட்கலாம்.

<>பூமியில் சொர்க்கம்<>(1)

"ராட்சத பாண்டாவின்

ஊரான ஸ்ச்சுவான் மாநிலத்தில்

இன்பப் பயணம்"

<0>பொது அறிவுப்போட்டி<0>


Jiu zhai gou சீனாவின் ஸ்சுவான்
மாநிலத்தின் மேற்கு பகுதியின் abaஇல் திபெத்தின qiang இன தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் 40 கிலோமீட்டருக்கு மேலான பள்ளத்தாக்குப் பரப்பில், 9 திபெத் இன கிராமங்கள் சிதறிக் கிடத்தின்றன. இஸ்ரேலிருந்து வந்த திரு Nerohem Yam, சீனாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்ய விரும்புகின்றார். Jiu zhai gou பற்றி அவர் கூறியதாவது,இவ்விடம், சீனாவில் மிகுதியும் எழிலானது. இதர இடங்களில் இது போன்ற மலைகளையும் ஏரிகளையும் நான் பார்த்ததில்லை.


இவை, இதர அமைத்துக்கும் மேலானது என்றார்.நீரினால், Jiu zhai gou அற்புதமானதாக உள்ளது. நீர் என்பது, அதன் ஆத்மா. இவ்விடத்தின் பள்ளத்தாக்குகளில், 100க்கும் அதிகமான சிறிய பெரிய வண்ண உயர் மலைகளும், ஏரிகளும் இங்கும் அங்குமாக காணப்படுகின்றன. உள்ளூர் திபெத் இன மக்கள், இதை ஹைசி என அழைக்கின்றனர். அதாவது, கடலின் மகன் என இது பொருட்படுகின்றது.Jiu zhai gouவில், சான்காய் என்னும் மிகப் பெரிய ஏரி, அருகில் பார்ப்பதற்கு நீர் பசுமையானது. ஏரியின் அடித்தளம் வரை நீர் தெளிந்து ஓடுகின்றது. தூரத்தில் பார்க்கும் போது, ஏரிப் பரப்பு, நீளமானது.


அலையில்லாமல் அமைதியானது.


இரு கரைகளில் பசுமையான மலைகள் தலைகீழாக இந்த ஏரியில் கிடக்கின்றன. ஓவியம் போல் அவை எழிலானவை. ஜப்பானைச் சேர்ந்த Morishita Sadamasa, இத்தகைய ஏரியைக் கண்டு ரசித்த பின், வாயார பாராட்டினார்.

அவர் கூறியதாவது,ஜப்பானில் Jiu zhai gou பற்றிய தொலைக்காட்சி படத்தைப் பார்த்துள்ளேன். இங்கு வந்து, அதன் உண்மை காட்சியைப் பார்த்த பின்னர், தொலைக்காட்சியிலுள்ளவற்றை விட இது மேலும் அழகானது. இத்தகைய ஏரிகள், ஜப்பானிலும் இருக்கின்றன. ஆனால், Jiu zhai gou அவற்றை விட அழகு என்றார்.Jiu zhai gouவிலுள்ள நீர், ஏரிகளில் இருக்கும் போது அதிகமாக அமைதியாகவுள்ளது. ஆனால், மரங்கள் நிறைய வளர்ந்துள்ள மலையிலிருந்து செங்குத்தாக வீழ்ந்த போது, நீர் ஆர்ப்பரிக்கும் அருவியாக மாறிவிடும். Jiu zhai gouவில் 17 நீர் அருவிகள் உள்ளன. பார்ப்பதற்கு, நீர்மட்டத்தின் ஆழம் அதிகமல்ல. ஆனால், அகலமான நீர் திரை, பாளை முழுவதிலும் தொங்கவிடப்படுவது போல் காட்சியளிக்கின்றது. அவற்றில் நோழ்லான் எனும் நீர் அருவி, சீனாவில் மிக அகலமான நீர் அருவி என்று புகழ்பெற்றுள்ளது. நீர் ஓட்டம், நூறு மீட்டர் அகலமுடைய மலைச்சரிவின் விளம்பில் கீழே நோக்கி ஓடுகின்றது. இது, நீர்த் திரையாகக் காட்சி அளிக்கின்றது.


சூரிய ஒளியில் இது, வானவில் போல் மாயக் காட்சி அளிக்கின்றது. மிக அற்பதமானது. இது தான், Jiu zhai gou. பூமியில் சொர்க்கம் என சீனர் அணைக்கின்றனர். Jiu zhai gou 1992ஆம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக இயற்கை மரபுச் செல்வப்பட்டியலில் சோர்க்கப்பட்டது.



இங்கு வசிக்கும் திபெத் இன மக்களின் கருத்தில், Jiu zhai gou, தங்களது பனி மலையும் நீரும் ஆகும். இங்குள்ள மலைகள், நீர், வனம், கற்கள் எல்லாம் கடவுளால் அளிக்கப்பட்டவை. திபெத் இன இளம் பெண் இனாமான்ஹுன் பேசுகையில், Jiu zhai gouவிலுள்ள புல், செடி, ஒவ்வொன்றையும் கவனமாக பேணிக்காக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்று எங்கள் உள்ளூர் திபெத் இனத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மலைகள், ஆறுகள், மரங்கள் எல்லாம், கடவுளால் அளிக்கப்பட்ட அன்பளிப்புகள். மனிதகுலம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அவற்றைச் சீர்குலைக்க காரணம் ஏதுமில்லை என்றார்.


இனாமான்ஹுனும் அவரது திபெத் இனத்தவர்களும் இன்று வரையிலும் Jiu zhai gouவில் வாழ்கின்றனர். அவர்கள், மதக்கொடிகள், வெள்ளைக் கோபுரங்கள் மூலம் பயணிகளுக்கு திபெத் இன நடையுடை பாவனைகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் விரும்தோம்பல் மிக்கவர்கள். பயணிகள் திபெத் இனத்தவர்களின் வீட்டில் விருந்தினராக வெண்ணெய் தேனீரை அருந்து, பார்லி மதுவைக் குடித்துக் கொண்டே திபெத் இனத்தவர்கள் ஆடிப்பாடுவதைக் கண்டு ரசிப்பது, மகிழ்ச்சியான

ஒன்றாகும்.


Jiu zhai gouவைப் பார்வையிட்ட பின், மனித சொர்க்கத்தில் தொடர்ந்து சுற்றுலா செல்ல, கார் மூலம் ஹுவான் லுன் எனும் காட்சிப் பிரதேசத்துக்குச் செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடையில் தூரம் 130 கிலோமீட்டர் மட்டுமே. Jiu zhai gouவைப் போல, 1992ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால், ஹுவான் லுனும் உலக இயற்கை மரபுச் செல்வத்தின் பெயர்பட்டியலில் சேர்க்கப்பட்டது. நீர் என்பதே இங்குள்ள முக்கியக் காட்சியாகும்.





ஹுவான் லுனில் நீர் காட்சியைக் கண்டு ரசிக்கும் போது, மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி பார்க்க வேண்டி ஏற்பட்டது. பள்ளத்தாக்கில் சுமார் 4 கிலோமீட்டர் நீளமான மெல்லிய மஞ்சள் நிறத் தரையில் 3000க்கும் அதிகமான குளங்கள் இருக்கின்றன. படி வயல் போல் அவை காணப்படுகின்றன. சூரிய ஒளியில் அவை மின்னி ஒளி வீசுகின்றன.

Thursday, February 01, 2007

<>சீன வானொலியின் புதிய தமிழ் நிகழ்ச்சி நிரல்<>


(புதிய நிகழ்ச்சி நிரல் (2007,பிப்.1முதல்
இந்த நிகழ்ச்சி
நிரல் செயல்பாட்டுக்குவர உள்ளது)


<>நிகழ்ச்சி நிரல்<>
*********
திங்கள் :- செய்திகள், செய்தித் தொகுப்பு
மக்கள் சீனம், நட்பு பாலம்,
சீன வரலாற்றின் சுவடுகள்,
சீன உணவு அரங்கம்.



செவ்வாய் :- செய்திகள், செய்தித் தொகுப்பு,
சீனாவில் இன்ப பயணம், சீனப்
பண்பாடு அல்லது சீனக் கதை,

நேருக்கு நேர், தமிழ் மூலம் சீனம்.

புதன் :- செய்திகள், செய்தித் தொகுப்பு
கேள்வியும் பதிலும், மலர்ச்
சோலை, நேயர் நேரம்.


வியாழன் :- செய்திகள், செய்தித் தொகுப்பு,
அறிவியல் உலகம், நலவாழ்வுப்
பாதுகாப்பு, இசை, தமிழ் மூலம் சீனம்.


வெள்ளி :- செய்திகள், செய்தித் தொகுப்பு, சீன
சமூக வாழ்வு அல்லது சீன மகளிர், தமிழ்
மூலம் சீனம், உங்கள் குரல்.


சனி :- செய்திகள், சீனத் தேசிய இனக் குடும்பம்,
நேயர் கடிதம், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம்
சீனம்.

ஞாயிறு :- செய்திகள், விளையாட்டுச் செய்திகள்,
நேயர் கடிதம்,நேயர் விருப்பம்.

Friday, January 19, 2007

<<>>பொது அறிவு போட்டி படிவம்<<>>

சீன வானொலி நிலையம் த‌ற்போது

" ராட்சத பாண்டாவின்

ஊரான

ஸ்ச்சுவான்

மாநிலத்தில்

இன்பப் பயணம் "


எனும் பொது அறிவு போட்டியினை
அறிவித்து உள்ளது.

அந்த போட்டியில் தமிழ்ப் பிரிவும்
பங்கு ஏற்கிறது.

தற்போது தமிழ்ப் பிரிவு கேட்டிருக்கும்

எட்டு வினாக்கள் :-

1. Jiu zhai gou காட்சி மண்டலத்தில் எந்த இனத்தை
சேர்ந்த 9 கிராமங்கள் உள்ளன?

ஹான் இனம் ( ) திபெத் இனம் ( )

2. Jiu zhai gou மற்றும் ஹுவான்
லுன் காட்சி மண்டலங்கள்
இரண்டும், உலக இயற்கை மரபுச்
செல்வங்களின் பெயர்ப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளதா?

ஆம் ( ) இல்லை ( )

3. ஒ மெய் மலை சீனாவின்
புனித புத்த மத இடங்களில்
ஒன்றாக விளங்கின்றதா ?

ஆம் ( ) இல்லை ( )

4. லெ சான் பெரிய புத்தர்
சிலையின் உயரம் என்ன?

100 மீட்டர் ( ) 70 மீட்டர் ( )

5. சிங்சங் மலை சீனாவின் தாவ்
மதம் பிறந்த இடங்களில் ஒன்றா?

ஆம் ( ) இல்லை ( )

6. துச்சியங் அணைக்கட்டு கட்டி
யமைக்கப்பட்டு எத்தனை
ஆண்டுகளாகின்றன?

1000 ஆண்டுகள் ( ) 2000 ஆண்டுகள் ( )

7. பாண்டாவின் ஊர், ஸ்ச்சுவான்
மாநிலத்தில் உள்ளதா?

ஆம் ( ) இல்லை ( )

8. வொலுங் இயற்கை பாதுகாப்பு
மண்டலத்தில் எத்தனை காட்டுப்
பாண்டாக்கள் உள்ளன?

100 க்கு மேல் ( ) 500 ( )

#################################

விடைகள் நிரப்பிய

வினாத்தாள் அனுப்ப

வேண்டிய இறுதி

நாள்:- 30.04.2007

குறிப்பு : போட்டிக்கான விடையை
கட்டத்தில் டிக் செய்ய‌வும்.

நேயர் எண் : __________________

பெயர் : -

முகவரி : -

Monday, December 04, 2006

சீன வானொலி சிகரம் தொட வாழ்த்துக்கள்!

அமெரிக்க சீன வானொலி நேயர்

மன்றத்தின் வாழ்த்து மடல்!

அனைவருக்கும் எனதினிய வணக்கத்தை
இங்கு பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்!

சீன வானொலி நிலைய வழிநடைப் பயணத்தில் இது ஒரு மைல் கல்!

வானொலி வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய தருணம் இது!

அது கடந்த பாதைகளை திரும்பிப் பார்க்கும் போது அதன் துவக்கமும் இன்றைய
பிரம்மாண்ட வளர்ச்சியும் நம் கண்களில் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.
சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!

பீகிங் வானொலியாய் உதயமாகி
BE-KING போல உலக வானொலிகளின்
அரசனாக வீர நடைபோட்டு
43 மொழிகளில்....38 அந்நிய மொழிகளில்
அட்டகாசமாய் உலகை வலம்வருகிறது!

உலக நேயர்களிடமிருந்து வரும் நேயர் கடிதங்களின்
எண்ணிக்கை உலகின் வேறு எந்த வானொலிக்கும் வராத
மிக அதிக அளவில் வந்து குவிகின்றது. இதுவே அதன் பலம்!

அதன் வெற்றி! சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில்
இது ஒரு சரித்திரச் சாதனை மைல் கல்!

சீன வானொலி துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப்
பின் தமிழ் பிரிவு துவக்கப்பட்டு 43 விழுதுகள் விட்டு
பழுதுகள் இல்லாமல் பணி தொடர்கிறது என்றால்
சீன வானொலிக்கும் அதன் நேயர்களுக்கும் இடையே
உள்ள உறவானது மிகப்பலம்பொருந்தியது என்பது
எவரும் மறுக்கவியலாதது.

43 விழுதுகளில் தமிழுக்காகவும் ஒரு விழுது கிடைத்ததில்
தமிழன் என்ற வகையில் மிகப் பெருமிதம் கொள்கிறேன்.

கடல் கடந்து வந்தாலும் இந்த உணர்வே என்னை இங்கும்
ஒரு மன்றம் ஏற்படுத்தி சீன வானொலிச் சேவையை
செவிமடுக்க வைக்க தூண்டுகோலாய் அமைந்தது. தாய்த்
தமிழகத்தில் கிளைவிட்டு முளைவிடும் நேயர்மன்றங்களுக்கும்
இணையத்தில் ஒரு பக்கத்தை ஏற்படுத்தித் தந்து சீன
வானொலிக்கும் நேயர்மன்றங்களுக்கும் இடையே ஒரு
உறவுப் பாலத்தை நிறுவிட உத்வேகம் தந்துள்ளது.
சீன வானொலியின் வெற்றியின் ரகசியம்தான் என்ன?

அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறவர்கள் சீன வானொலி
தமிழ் பிரிவில் பணியாற்றுவோர்!

தமிழ் செய்தி வாசித்தால் மட்டும் போதாது!
தமிழ் நிகழ்ச்சிகள் அளித்தால் மட்டும் போதாது;
தமிழர்களாகவே மாறி அவர்களோடு இரண்டறக்
கலந்து அவர்கள் இதயம் நுழைந்து இதமாய்
செய்திகள் தரவேண்டும் என்ற முனைப்போடு
தங்கள் சீனப் பெயர்களை அழகான தமிழ்ப்
பெயர்களைத் தேர்ந்தெடுத்து
அதையே தங்களுக்கு சூட்டிக்கொண்டு
தமிழ்செல்வமாகவும் கலையரசியாகவும் வாணியாகவும் கலைமகளாகவும்
வலம் வருகிற பொற்பாதங்களை இங்கிருந்தே தொட்டு வணங்குகிறேன்.

சீன வானொலி தமிழ் பிரிவு வானொலி தமிழர்க்கு கிடைத்த தவம்!
தமிழ் வானொலி ரசிகர்களுக்கு கிடைத்த வேதம்!
தமிழர்களின் ஈடிணையில்லா கீதம் அது!
தமிழர்களின் நாடி நரம்புகளின் நாதம் அது!

எங்கள் உணர்வுகளுக்கு உயிராய் உணவாய் உலாவரும்
சீன வானொலி 66ம் ஆண்டில்
அடியெடுத்து வைக்கும் இத் தருணத்தில் எங்கள்
அமெரிக்க மன்றத்தின் சார்பில் வாழ்த்துவதோடு,
சீன வானொலி இயக்கத்துக்கு பக்கபலமாய் இருக்கும்
அதன் இயக்குனர்,
தமிழ் பிரிவுத் தலைவர்
திருமதி.கலையரசி அவர்கள் உட்பட
அனைத்து அலுவலர்களுக்கும் எமது
மன்றத்தின் சார்பில்
வாழ்த்துப் பூக்களைத் தூவி மகிழ்கின்றோம்!
சீன வானொலி சிகரம் தொட என்னிதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

இப்படிக்கு.
சி.எஸ்.ஆல்பர்ட் பெர்னாண்டோ,
தலைவர்,
அமெரிக்க சீன-தமிழ் வானொலி நேயர் மன்றம்.
அமெரிக்கா.

Thursday, November 23, 2006

<>ஐம்பெரும்விழா சிறப்பு வாழ்த்துரை...!<>

ஐம்பெரும்விழா சிறப்பு வாழ்த்துரை...!

-ஆல்பர்ட் ·பெர்னாண்டோ,
தலைவர்,
சீன தமிழ் வானொலி நேயர்மன்றம்,
அமெரிக்கா.
நெஞ்சம் இனிக்கும் இந்த ஐம்பெரும்விழாவிற்கு
வருகைதந்துள்ள சீன வானொலி பிரதிநிதிகள்
நால்வரையும் என் சார்பிலும் அமெரிக்க
நேயர்மன்றத்தின் சார்பிலும் இருகரம் கூப்பி
வருக, வெல்க, வாழ்கஎன வாழ்த்திடுவதில் மகிழ்வெய்துகிறேன்.

என்னுடல் மட்டும் அமெரிக்காவில்!

என்னுள்ளமெலாம் இந்தக் கஸ்தூரிபா கலையரங்கில்தான்!

இந்திய - சீன நட்புறவு ஆண்டுவிழா...நமது
சீன வானொலி பிரதிநிதிகள் திட்டமிட்டபடி
இங்கே வருவதில் சிறுதடை விசா பெறுவதில்
இருந்தும், "அருவினை யென்ப வுளவோ
கருவியாற் காலமறிந்து செயின்" என்ற வள்ளுவப் பெருந்தகையின்
"What is impossible for right means at the RIGHT TIME" என்பதற்கொப்ப தடைகளைத் தகர்த்து இங்கு
வந்திருக்கிறார்கள், நம்
தமிழ் பிரிவு தலைவர் கலையரசி அம்மையார்
அவர்களும் மற்ற பிரதிநிதிகளும்!

சீனாவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவை..நட்பை ஆண்டுவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
சீன- இந்திய நட்பு இன்று நேற்று ஏற்பட்டது
அல்ல; சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்பாக
பண்டைக்கால சீனாவின் புகழ்பெற்ற பண்பாட்டுத்
தூதர் துறவி யுவான் சுவாங் காலத்தில் முகிழ்த்தது!

கி.பி627ல் யுவான் சுவாங்க் இந்தியாவில் அப்போது
புகழ்பெற்று விளங்கிய நாளந்தா பலகலைக்கழகத்தில்
கல்வி பயில தமது 27ம் வயதில் கால்நடையாக....
பொடிநடையாக காடுமேடு வனாந்திரங்களைக்
கடந்து அன்றைய சீனாவின் சாங் ஆனிலிருந்து
அதாவது இன்றைய மத்திய சீனாவின்
"சீ ஆன்" நகரிலிருந்து மனித நடமாட்டமில்லாத பாலைவனங்களையெல்லாம் கடந்து பல்வித
இன்னல்களைக் கடந்து கி.பி.629ம் ஆண்டு வட
இந்தியாவிற்கு வந்தார்.
(அப்படிப்பட்ட சிரமங்கள் ஏதும் இன்றி இன்றைக்கு
நமது சீன வானொலிப் பிரதிநிதிகள் இங்கு
வந்துள்ளனர். )

நாளந்தா பல்கலைக்கழகத்தில் தம் வண்ணக் கனவுகளுக்கு உயிர் கொடுத்தார் சுவாங்! எண்ணிவந்ததைவிட நம் பண்பாடும் விருந்தோம்பலும் அவரைப் பல்லாண்டுகள் தங்கவைத்த நட்புறவுப் பூமி இது! அவர் எழுதிய நூல்களே இதற்குச் சான்று.

பாஹியான் போன்ற யாத்ரிகர்களும் தங்கள் எழுதிய வரலாற்றுக்குறிப்புகள் நமது சீன-இந்திய நட்பை விரிவாக எடுத்து இயம்புகிறது.

சீன தேசத்தில் புகழ்பெற்ற நாவல்,

"மேற்கிற்கு சுற்றுலா"

இந்த நாவலின் கதாநாயகன் "தாங் சான் ச்சாங்"
என்ற பாத்திரம் சீன-இந்தியா நட்பை விலாவாரியாய் விவரிக்கிறது! அப்போது முகிழ்த்த உறவில் இடையில் சிறுவிரிசல் கண்டாலும் கடல் வாணிகத்தின் மூலம்
இருநாட்டு உறவுகளுக்கும் அப்போதே சிறகு முளைத்ததை எவராலும் மறுத்துவிடமுடியாது! இரண்டு தேசங்களும் மிகப்பழைய பாரம்பரியங்களுக்குச் சொந்தமானவை!

இரண்டு வேறுபட்ட நாகரிகங்களிலிருந்து கிளைத்தவை!
இரு தேசங்களுமே கிராமப்புறங்களும் விவசாயிகளையும் மிகுதியாகக் கொண்டவை!

அதிவேக நவீனத் தொழில்நுட்பத்தோடும், தொழிலும் வணிகமும் புரிபவை! பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்பவை!

ஒருசேர முன்னிலை வகிப்பது உலகின் அதிக மக்கள் தொகையில்!

பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய சீன வணிக மதிப்பு
ரூ.500 கோடி! இதுவே 2005ல் ரூ.8,500 கோடி! நடப்பு
ஆண்டில் இதுவே ரூ.90ஆயிரம் கோடியாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2010ல் இதன் இலக்கு
ரூ.2.25இலட்சம் கோடியென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் இருதேசங்களும் நட்பை வளர்த்து
தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டியது அத்தியாவசியம்
என்று கருதியதால்தான் சீனத்தலைவர் ஹ¥ சிந்தாவ்
இந்தியா வந்ததும்,"கையோடு கை சேர்த்து ஒத்துழைப்பை விரிவாக்கி, அருமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவது" என்ற அவரது சொற்பொழிவு!

சீன-இந்திய நட்புறவு, இரு தரப்புகளுக்குச் சாதகமானது! ஆசியாவிற்கும் உலகிற்கும் நன்மை பயக்கும்; சீன-இந்திய உறவு இருதரப்பு வரம்பைத் தாண்டி, உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அவரது உரை அவரது மனவெளிப்பாடு மட்டுமல்ல; இரு தேசத்தின் நட்புறவில் மலர்ந்த காலத்தின் தேவை கருதிய சத்தியமான வார்த்தைகள் என்பதில் எள் முனையளவும் அய்யமில்லை!

இருதேசங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக சிக்கிம்
மாநிலத்தினையும் சீனாவின் திபெத் சுயாட்சிப்
பகுதியையும் இணைக்கும் நாதுல்லா கணவாய் கடந்த 44 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலைத் திங்கள் 6ம் நாள் திறக்கப்பட்டதில் இந்த உறவுக்கு புதியபாலம்
உதயமாகியுள்ளது தொடரும் என்ற பேருவகையை நமக்கு அளிக்கிறது.

சீன-இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய தருணமிது என்றால் அது மிகையில்லை.

சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!
பீகிங் வானொலியாய் உதயமாகி BE-KING போல
உலக வானொலிகளின் அரசனாக வீர நடை
போட்டு 40க்கும் மேற்பட்ட அந்நிய மொழிகளில்
அட்டகாசமாய் உலகை வலம்வருகிறது! உலக நேயர்களிடமிருந்து வரும் நேயர் கடிதங்களின்
எண்ணிக்கை உலகின் வேறு எந்த வானொலிக்கும்
வராத மிக அதிக அளவில் வந்து குவிகின்றது.
இதுவே அதன் பலம்! அதன் வெற்றி!

சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில் இது ஒரு சரித்திரச் சாதனை மைல் கல்!


சீன வானொலி துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப்
பின் தமிழ் பிரிவு துவக்கப்பட்டு 43 விழுதுகள்
விட்டு பழுதுகள் இல்லாமல் பணி தொடர்ந்து
இன்றைக்கு சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர் திருமதி.கலையரசி அம்மையாரயும் மற்ற மொழிப் பிரதிநிதிகளையும் தமிழகம் நோக்கி எத்தனை
தடை வந்தாலும் அதையும் தாண்டி தமிழ்
நேயர்களைச் சந்திப்போம் என்று ஈங்கு
வந்துள்ளதே இதன் வெற்றியை பறை
சாற்றுகிறது என்பது அப்பழுக்கற்ற உண்மை!

தமிழகத்தில் நானறிந்தவரை நடிகநடிகையர்களுக்கு ரசிகர்மன்றங்கள் இருக்கிறது. நற்பணிமன்றங்கள்
இருக்கின்றன. ஆனால் வானொலிக்காக நேயர்கள்
இருக்கலாம்; மன்றங்கள் இருக்கிறதா என்றால்
நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

வானொலியின் விவசாய நிகழ்ச்சிக்காக
மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டிக்கொண்டிருக்கிற சூழலில் அகில இந்திய சீன வானொலியின் தமிழ் நேயர்மன்றங்கள் தமிழக
மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டிருப்பது
சீன வானொலி மட்டுமே என்றுஅறுதியிட்டு
உறுதியாகச் சொல்ல முடியும்!

இதற்கு காரணம் அ.இ.சீன வானொலி தலைமை
மன்றத் தலைவர்வளவனூர் திரு.செல்வம் மற்றும்
அதன் நிர்வாகிகள் மற்றும் நேயர்மன்ற தலைவர் பொறுப்பாளர்களையே சாரும்! இவர்களின்
தூண்டுதலால் ஆர்வமாய் சீன வானொலியைச்
செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து
நேயர்மன்றங்கள் உருவாகி உற்சாக
நடைபோடுகின்றன.

இப்படிப்பட்ட தன்னார்வலர்களால் உருவாகிய
நேசமிகு நேயர்மன்றங்களை ஒருங்கிணைத்து ஓரமைப்பாக..பேரமைப்பாக ஏற்படுத்தி அகில
இந்திய சீனவானொலி நேயர்மன்றம் துவங்கித்
தொய்வின்றி தொடர்ந்து துள்ளல் நடைபோட்டு
20 நிதர்சன ஆண்டுகளைக் கடந்து வாலிபமுறுக்கோடு திகழ்வதைக் கொண்டாடுகிறோம்.

இதன் மூலவராய் உற்சவமூர்த்தியாய்த் திகழும்
வளவனூர் செல்வம் அவர்களுக்கு இந்தநேரத்தில்
பலத்த கரவொலி எழுப்பி அவருக்கு உற்சாகம் ஊட்டுவோம்!


அ.இ.சீன.வானொலி நேயர்கள் மன்ற 18வது கருத்தரங்கு! உற்சாகப் பெருவெள்ளமாய் இதோ!
இந்தக் கருத்தரங்கம் என்பது தேனூறும் நிகழ்வன்றோ!
இங்கு அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு நேயரும்
மத்தாப்பூவாய் மலர்ந்து சிரிக்கும் முகங்களோடு!
சீன வானொலித் தமிழ் பிரிவுத்தலைவர் நம் பாசமும்
நேசமும் நிறைந்த திருமதி கலையரசி என்ற
ஜு ஜுவான் குவா மற்றும் சீன வானொலி தென்
ஆசிய மொழிப்பிரிவு துணைத்தலைவர் திரு.சுன்
ஜியான் ஹி, நேபாள பிரிவு தலைவர் திருமதி.ஜங் யு,
சிங்கள மொழிப்பிரிவு துணைத்தலைவர் செங் லி
ஆகியோர் நம் விருந்தினர் என்று அவர்களை வரவேற்று உபசரிக்கும் உத்வேகத்தோடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் இக் கருத்தரங்கில் வீற்றிருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனதினிய அன்பு மலர்த்தூவல்கள்!

இந்த ஐம்பெரும் விழா இங்கே அமைந்திட இரவு பகல் பாராது உழைத்து கண்களில் மின்னும் களைப்பையும் சோர்வையும் மீறி இதழ்கடை முறுவலோடு பம்பரமாய்ச் சுறுசுறுப்போடு சுழலும் பல்லவி.கே.பரமசிவன் அவர்களுக்கான என் அடிமனத்து வாழ்த்துக்களோடு எழுப்புங்கள் உங்கள் கரவொலிதனை!

அடுத்த கருத்தரங்கத்திற்கு முன்பாக நேயர்மன்றம்
இல்லாத மாவட்டங்களில் அருகிலுள்ள மாவட்டத்தைச்
சேர்ந்த நேயர்மன்றம் பொறுப்பெடுத்து நேயர்மன்றத்தை உருவாக்கவும், நேயர்மன்றம் இல்லாத மாவட்டமே இல்லையென்ற நிலை உருவாக்கிடவும் முன்
வரவேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள்
முன் வைக்கிற அதே வேளை, நான் முன்னமே
அளித்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு நேயர்
மன்றத்துக்கும் ஒவ்வொரு இணையப்பக்கத்தை
உருவாக்கித் தருவேன் என்ற மகிழ்ச்சியான
செய்தியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் சீன வானொலியை உடனுக்குடன் எட்டும் வகையில் இருக்கும்!

மீண்டும் இந்த ஐம்பெரும் விழா வெற்றிபெறவும்
இதற்கு மூலகாரனமாய் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னினிய வாழ்த்துக்கள்.

நன்றி.(ச்சியே..ச்சியே) வணக்கம்!

Wednesday, September 20, 2006

<<>>65th ANNIVERSARY SPL. ISSUE<<>>

சீன வானொலியின்

65வது ஆண்டு விழா ம‌ல‌ர்

<0> அறிவிப்பு<0>









அறிவிப்பாளர் : வாணி,

சீன வானொலியின் த‌மிழ் பிரிவு.

Dear friends,

As you know CRI will be celebrating its 65th

anniversary in the month of December 2006.

We have proposed to bring out a commemorative

magazine on this occasion. We invite listeners to

write their experiences with CRI in Tamil. The essay

should not exceed 5 pages in full scope paper.

We will select the best article and publish in

the magazine. With regards, Vani, Tamil Service

China Radio International.

***************************************************************
சீன வானொலியின்

65வது ஆண்டு விழா ம‌ல‌ர்

<0> அறிவிப்பு<0>











அறிவிப்பாளர் : எஸ்.செல்வம்,


தலைவர்,

அனைத்திந்திய சீன வானொலி

நேயர் மன்றம்.

அன்பினியீர்!

வணக்கம்.

சீன வானொலி தனது 65 வது


ஆண்டு நிறைவை எதிர்வரும் டிசம்பர்

திங்களில் கொண்டாட உள்ளது.

அதை முன்னிட்டுவெளியிடப்பட

இருக்கும் நினைவு மலரில், நேயர்களின்

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை

வெளியிட தமிழ்ப்பிரிவு முடிவு செய்துள்ளது.


எனவே, சீன வானொலியுடனான தங்களின்

அனுபவங்களை 5 பக்கங்களுக்கு மிகாமல்

கட்டுரையாக எழுதி உடன் சீன வானொலிக்கு

அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்

கொள்கிறேன். இக்கட்டுரையை ஒரு வார

காலத்திற்குள் அனுப்பி வைத்தால் மிகவும்

நல்லது.

தங்களின் ஒத்துழைப்பை சீன வானொலிக்கு

வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு,


எஸ்.செல்வம்,
தலைவர்,

அனைத்திந்திய சீன வானொலி

நேயர் மன்றம்.

Friday, June 16, 2006

பொது அறிவுப் போட்டி விடைகள்

"நானும் சீன வானொலி நிலையமும்"

2006ம் ஆண்டுக்கான‌

<>பொது அறிவுப் போட்டி விடைகள்<>


1. ஹரா கியோஷி


2. ரேடியோ பீகிங்


3. 27


4. 43


5. கென்யா



6. CRI Online


7. 3600


8. 21 லட்சத்து 70 ஆயிரம்

ooooo00000OOOoooooooo

உறுப்பினர் எண்:077619

ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ,

3604 பே பெர்ரி டிரைவ்,

வாக்கசா. விஸ்கான்சின்.

அமெரிக்க கூட்டுநாடுகள்.

அன்பினிய சீன வானொலி தமிழ் பிரிவு நிர்வாகிகளுக்கு,

வணக்கம்.

நானும் சீன வானொலி நிலையமும்

என்ற பொது அறிவுப் போட்டிக்கான

விடைகளை இதன் மூலம் அனுப்பியதை

இணையத்தள பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அதாவது விடைகள் அனுப்பியதில் விரைந்து

உங்களை வந்தடைந்ததில் முதலாவதாக

இருக்க வேண்டும் என்பதால்

இந்தவேண்டுகோள்.

ஏற்பீர்களா?

அன்புடன்,
ஆல்பர்ட்,
அமெரிக்கா.